சர்வதேச கடற்கரையை சுத்தப்படுத்தும் தினம் மற்றும் தேசிய கடல்சார் வளங்களைப் பாதுகாக்கும் வாரத்தை முன்னிட்டு செப்டம்பர் 22ம் திகதியாகிய இன்று மாவட்ட ரீதியில் புங்குடுதீவு கண்ணகி அம்மன் கோவில் அருகாமையில் உள்ள கடற்கரை பிரதேசம் தெரிவு செய்யப்பட்டு சிரமதானம் செய்யப்பட்டது. கரையோர சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்பு அதிகார சபையினால் நடாத்தப்பட்ட இந் நிகழ்வில் அரசாங்க அதிபர், பிரதேச சபை உறுப்பினர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பாடசாலை ஆசிரியர், மாணவர்கள், கடற்படையினர், கரையோரம் பேணல் உத்தியோகத்தர்கள், கடற்தொழில் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் இச் சிரமதான நிகழ்வில் கலந்து கொண்டனர்.



