2021 ஆம் ஆண்டிற்கான செயற்பாடுகளை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்று காலை 9.00 மணிக்கு எமது பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. கோவிட் 19 கட்டுப்பாடுகளுக்கு அமைய உத்தியோகத்தர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர் . தேசியக் கொடியேற்றலுடன் ஆரம்பமான இந் நிகழ்வில் தேசியகீதம் இசைக்கப்பட்டு உத்தியோகத்தர்களால் சத்தியப்பிரமாணம் எடுத்துக்கொள்ளப்பட்டதுடன் பொதுசுகாதாரப் பரிசோதகரின் கோவிட் 19 தொடர்பான உரையும் இடம்பெற்றது.



