මුද්‍රණය
ප්‍රවර්ගය: News & Events

User Rating: 0 / 5

Star InactiveStar InactiveStar InactiveStar InactiveStar Inactive
 
"செழிப்பான எதிர்காலம் சௌபாக்கியமான நாடு"என்ற தொனிப்பொருளில் எமது நாட்டின் 73வது சுதந்திர தின நிகழ்வு 2021.02.04ம் திகதியான இன்று எமது பிரதேச செயலகத்தில் காலை 8.00 மணிக்கு தேசிய கொடியேற்றலுடன் ஆரம்பமாகியது. அதனை தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன் 01 நிமிட அக வணக்கம் இடம்பெற்றது. எமது நாடு சுதந்திரம் அடைந்த வரலாறு பற்றியும் நாட்டின் அபிவிருத்திக்கு அரச அலுவலர்கள் கடமையாற்றுவதன் அவசியம் பற்றியும் உதவி பிரதேச செயலர் தமது உரையில் எடுத்துக் கூறினார். இவ் வருட சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் மரக் கன்றுகள் நடும் திட்டத்திற்கிணங்க பிரதேச செயலக வளாகத்திலும் கிராம அலுவலர் பிரிவுகளிலும் காலை 9.29 ற்கு சுப முகூர்த்த வேளையில் மரக்கன்றுகள் நாட்டப்பட்டது. அதனை தொடர்ந்து சிரமதான பணிகள் நடைபெற்றது.
 
144393125 763422367887178 9154758466980417619 n 145079078 763422417887173 6655723727976533517 n 144586253 763422461220502 1345107782790112843 n 144236932 763422497887165 5114580584475744227 n 144490812 763422534553828 1336250626955558513 n 145090218 763422651220483 5760075090372396890 n 144237985 763422741220474 4922712192828870829 n 144950688 763422684553813 2609024155427481057 n
FaLang translation system by Faboba