"தேசிய வரவு செலவுத்திட்டம் மூலம் ஒரு இலட்சம் வேலைகள் -2022" கிராமிய அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் எமது பிரதேச செயலக பிரிவில் இன்றைய தினம் 2022.02.03, காலை 8.52 மணிக்கு கிராம அபிவிருத்தி திட்டங்கள் உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
பொருளாதார சவால்களை வெற்றி கொள்வதற்காக உற்பத்தியை அதிகரித்து, வருமானத்தினை அதிகரிக்கும் மூலோபாயங்கள் மீது அதிக கவனத்தை ஈர்த்து, படைப்பாற்றல்கள் மிகுந்த நடவடிக்கைகள் ஊடாக உற்பத்தி பொருளாதாரமொன்றைக் கட்டி எழுப்பும் நோக்குடன், வாழ்வாதார அபிவிருத்தி கருத்திட்டங்கள் உட்பட பல்வேறு துறைகளுக்குரிய பல அபிவிருத்தி கருத்திட்டங்கள் இக் கிராமிய அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்கள் ஊடாக செயற்படுத்தப்படும்.



