சர்வதேச கடற்கரையை சுத்தப்படுத்தும் தினம் - 2022
சர்வதேச கடற்கரையை சுத்தப்படுத்தும் தினம் மற்றும் தேசிய கடல்சார் வளங்களைப் பாதுகாக்கும் வாரத்தினை முன்னிட்டு கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் ஏற்பாட்டில் 23 செப்டெம்பர் 2022 காலை 8.00 மணிக்கு புங்குடுதீவு கடற்கரை பிரதேசத்தினை (பிரதேச வைத்தியசாலைக்கு அருகாமையில்) சுத்தப்படுத்தும் நிகழ்வு இடம்பெற்றது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் திரு. கணபதிப்பிள்ளை மகேசன், சிறப்பு விருந்தினராக BBK Partnership - Chartered Accountants முகாமையாளர் திரு. சிவசுப்பிரமணியம் உமாநிதி (யாழ்ப்பாணம்) மற்றும் வேலணை பிரதேச செயலர் திரு. கைலாசப்பிள்ளை சிவகரன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

