2023 ஆம் ஆண்டிற்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு
"நூற்றாண்டுக்கான முன்னெடுப்பு" என்னும் தொனிப்பொருளுடன் ஆரம்பிக்கப்பட்ட 2023 ஆம் ஆண்டிற்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வானது பிரதேச செயலாளர் தலைமையில் இன்று காலை 9 மணியளவில் ஆரம்பமாகியது.
தேசியக்கொடி பிரதேச செயலாளர் அவர்களால் ஏற்றப்பட்டதை தொடர்ந்து தேசியகீதம் இசைக்கப்பட்டது . அடுத்ததாக உத்தியோகத்தர்கள் அனைவரும் நாட்டிற்காக உயிர்த்தியாகம் செய்தவர்களுக்கு இரண்டு நிமிட மௌனஅஞ்சலி செலுத்தினார்கள். தொடர்ந்து அனைத்து உத்தியோகத்தர்களினாலும் அரச சேவை உறுதிஉரை எடுக்கப்பட்டது .அதனை தொடர்ந்து பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் உரை ஆற்றிய பிரதேச செயலாளர் சவால் மிக்க காலப்பகுதியில் கடமையாற்றிய அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்து இனிவரும் காலத்திலும் அர்ப்பணிப்பான சேவையை வழங்குமாறு கேட்டுக்கொண்டார். தொடர்ந்து உதவி பிரதேச செயலாளர் ,பதவிநிலை உத்தியோகத்தர்களின் வாழ்த்து செய்தி இடம்பெற்றது.

