உலக சுற்றுச்சூழல் தினம் - 2023
இன்றைய தினம் யூன் 05.06.2023ம் திகதி உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பிளாஸ்டிக் கழிவு முகாமைத்துவ தினம் மற்றும் கழிவு முகாமைத்துவ தினத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட ஓவியப் போட்டியில் கலந்து கொண்ட யா/வேலணை சரஸ்வதி வித்தியாலய மாணவர்களுக்கு எமது பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் மரக் கன்றுகள் வழங்கும் நிகழ்வும் அதனைத் தொடர்ந்து வேலணை பிரதேச செயலக உத்தியோகத்தர்களால் பி.ப.3.00 மணிக்கு ஆரம்பமாகி ஐந்து அணிகளாக அலுவலக முன்றலில் இருந்து நடை பணியாக பிளாஸ்டிக் , பொலித்தீன்களை அகற்றும் சிரமதான பணியும் பெரியளவில் வேலணை பிரதேசத்தை அண்டியுள்ள வீதியோரங்களில் மேற்கொள்ளப்பட்டது.






