சமுர்த்தி சமூக அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு வேலைத்திட்டத்தின் மூலம் சேகரிக்கப்பட்ட நிதியிலிருந்து 400 பாடசாலை மாணவர்களுக்கான புத்தகப் பை வழங்கும் நிகழ்வு எமது பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் 2024.02.04 ஆம் திகதி காலை 11.00 மணிக்கும், பிற்பகல் 2.00 மணிக்கு புங்குடுதீவு சமுர்த்தி வங்கி வலையத்திலும் மிகவும் சிறப்புற நிறைவு பெற்றது.
எமது பிரதேச செயலாளர் திரு.க.சிவகரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக மாவட்ட செயலாளர் திரு .அ.சிவபாலசுந்தரன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் திரு.F.C.சத்தியசோதி அவர்களும், DR. சந்திரகுமார், கண் வைத்திய நிபுணர் அவர்களும், திரு.P.சசிகுமார், இயக்குனர் Green Layer Environmental Organization, Jaffna அவர்களும், மற்றும் சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் திருமதி.ஜெ.வசந்தி, வேலணை சமுர்த்தி வங்கி முகாமையாளர் திரு.சி.சிவகுமார், புங்குடுதீவு சமுர்த்தி வங்கி முகாமையாளர் திரு ஆ. காண்டீபன், கருத்திட்ட முகாமையாளர் திரு. இ. தவமோகன், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பிரதேச மட்ட அமைப்பின் தலைவர் திரு.சு.அகிலன், வேலணை சமுர்த்தி வங்கியின் கட்டுப்பாட்டுச் சபை தலைவர் திரு.மு.சிவனேசன் அவர்களும் கலந்து கொண்டு மாணவர்களுக்கான புத்தகப் பையினையும் தென்னங்கன்றினையும் வழங்கி வைத்தனர்.







