உலக மண் தினம் உலக மண் தினத்தினை ( 05.12.2024) முன்னிட்டு
நல்லூர் பிரதேச செயலாளரின் அன்பளிப்பில் 10000 விதைப் பந்துகள் அன்பளிப்பாக கிடைக்கப் பெற்றது. அவை இன்றைய தினம் முதன் முறையாக புங்குடுதீவில் வீசப்பட்டது. அத்துடன் J/22 ஒலிகண்டி குளத்தினை சுற்றி 200 புங்கை மரக்கன்றுகள் நாட்டப்பட்டது. தொடர்ந்து புங்குடுதீவு மடத்துவெளி பகுதியில் பனை மர நாற்றுக்களும் விதைக்கப்பட்டது. மற்றும் வயலூர் முருகன் ஆலயத்திலும் கிருஸ்ண பிள்ளை சௌந்தராஜன் அவர்களின் நிதி உதவியுடன் மரங்கள் நாட்டப்பட்டது.








