வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் PSDG 2025 நிதி ஒதுக்கீட்டில் வேலணை பிரதேச செயலாளர் பிரிவில் கரையோர சுற்றுச் சூழல் பாதுகாப்பு நடவடிக்கையாக 500 கண்டல் தாவரங்களை நாட்டும் வேலைத்திட்டத்தில் முதற் கட்டமாக 300 தாவர நாற்றுக்கள் மண்டைதீவு சந்திக்கு அருகில் இன்றைய தினம் (19.09.2025) நாட்டப்பட்டதுடன் கரையோரப் பாதுகாப்பு மற்றும் கண்டல் தாவர முக்கியத்துவம் தொடர்பில் விழிப்புணர்வும் செய்யப்பட்டது.
இவ் வேலைத்திட்டத்தில் வேலணை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், வேலணை பிரதேச சபை உத்தியோகத்தர், மாவட்ட செயலக சுற்றச் சூழல் உத்தியோத்தர்கள், கிராம அபிவிருத்திச் சங்க மற்றும் மாதர் கிராம அபிவிருத்தி சங்க பிரதிநிதிகள், மகளிர் விவகாரக்குழு அங்கத்தவர்கள், கடற்தொழிலாளர் சங்க பிரதிநிதிகள், பிரதேச மட்ட மாற்று திறனாளிகள் அமைப்பு பிரதிநிதிகள், கடற்படையினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.



