(04.11.2025) உதவிப்பிரதேச செயலாளர் திரு.க.பார்த்தீபன் அவர்களின் தலைமையில் வேலணைப் பிரதேச செயலர் பிரிவின் மூத்த பிரஜையான 104 வயதினை அடைந்த சின்னத்துரை தங்கம்மாவினையும் 103 வயதினையடைந்த ஐயாத்துரை சிவக்கொழுந்து ஆகியோருக்கான கௌரவிப்பு நிகழ்வானது J/36 நயினாதீவு தெற்கு கிராமத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் யாழ் மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள், எமது பிரதேச செயலக சமூக சேவை உத்தியோகத்தர், முதியோர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர், அனர்த்த நிவாரண சேவை அபிவிருத்தி உத்தியோகத்தர் கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்,ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

