அச்சிடுக
பிரிவு: News & Events

பயனாளர் மதிப்பீடு: 0 / 5

இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்
 

இன்று (02.01.2024) எமது பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்ட நிகழ்ச்சித்திட்டம் தொடர்பான பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் இடம்பெற்றது. கௌரவ கடற்றொழில் அமைச்சரும் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருமாகிய கே.என். டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இக் கூட்டம் நடைபெற்றது.

இவ் கூட்டத்தில் பிரதேச செயலாளர் கைலாசப்பிள்ளை சிவகரன், உதவி பிரதேச செயலாளர், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களின் பிரதிநிதிகளும் திணைக்களங்கள் மற்றும் அமைச்சுக்களின் அதிகாரிகளும், மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கிராம மட்ட அலுவர்களும் மற்றும் கிராம மட்டத்தில் இயங்கும் சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத் திட்டத்தின் மூலம் ஒவ்வொரு கிராம அலுவலர் பிரிவிலும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய திட்டங்கள் தெரிவு செய்யப்பட்டு அவற்றில் மிக அவசியமாக நடைமுறைப்படுத்த வேண்டிய திட்டங்கள் குறித்து கௌரவ அமைச்சர் அவர்கள் கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகளிடம் கருத்துக்களை கேட்டறிந்து கொண்டார். அத்துடன் பொது மக்களின் விசேட கோரிக்கைகள் மற்றும் பிரச்சினைகள் குறித்தும் கௌரவ அமைச்சர் அவர்கள் கருத்துக்களை கேட்டறிந்து கொண்டார்.

1 2

3 4

5 6

7 8

9 10

FaLang translation system by Faboba