முதியோருக்கான மருத்துவ முகாம்
முதியோர் தேசிய செயலகத்தின் அனுசரணையுடன் வேலணை பிரதேச செயலகமும் இணைந்து நடாத்திய முதியோருக்கான மருத்துவ முகாம் நயினாதீவு அமுதசுரபி மண்டபத்தில் 2019.06.30ம் திகதி காலை 9.30 - 3.00 மணி வரை இடம்பெற்றது. இதில் வேலணை பிரதேச வைத்தியசாலை உத்தியோகத்தர்கள், யாழ் போதனா வைத்தியசாலை உத்தியோகத்தர்கள், பொது சுகாதார பரிசோதகர், கிராம மட்ட உத்தியோகத்தர்கள்,சமூக சேவை பிரிவு உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர். இம் மருத்துவ முகாமில் தொற்றா நோய்கள், கண் பரிசோதனை,பற்சிகிச்சை, குருதிப்பரிசோதனை தொடர்பான பரிசோதனைகளை 125 இற்கும் மேற்பட்ட முதியோர்கள் கலந்து கொண்டு பரிசோதித்து பயனடைந்தனர்.

