முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி மற்றும் பராமரிப்பு பற்றிய தேசிய வார நிகழ்வு
மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் அனுசரனையுடன் முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி மற்றும் பராமரிப்பு பற்றிய தேசிய வார நிகழ்வு 2019.07.26,29ம் திகதிகளில் வேலணை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் காலை 9.30 மணிக்கு இடம்பெற்றது. இந் நிகழ்வில் வேலணை பிரதேச செயலகத்திற்குட்பட்ட முன்பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டதுடன் முன்பள்ளிமாணவர்களின் அழகியல் கலை நிகழ்வுகளும் ஆசிரியர், பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வுகளும் இடம்பெற்றன.



