எமது பிரதேச செயலக 2020ம் ஆண்டுக்கான ஆரம்ப நாள் நிகழ்வு 2020.01.01ம் திகதி காலை 9.30 மணிக்கு பிரதேச செயலர் தலைமையில் கொடியேற்றலுடன் ஆரம்பமானது. இவ் ஆண்டுக்கான ஆரம்ப நாளில் மரநடுகை இடம்பெற்றதுடன் இயற்கை அனர்த்தம் மற்றும் போரினால் உயிரிழந்தவர்களுக்கான அகவணக்கம் செலுத்தப்பட்டு அரசாங்க சேவைக்கான சத்திய பிரமாணம் அனைத்து உத்தியோகத்தர்களாலும் எடுத்துக்கொள்ளப்பட்டது. பிரதேச செயலர் உரையை தொடர்ந்து உத்தியோகத்தர்கள் பலரால் புதுவருட வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டதுடன் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது.

























