வேலணை கிழக்கு மத்தி கிராம அலுவலர் பிரிவில் சபிரிகம வேலைத்திட்டத்தின் (சின்னண்ணா வீதி புனரமைப்பு மற்றும் கலைமகள் ஆசைப்பிள்ளை வீதியில் மதகு அமைத்தல்) ஆரம்ப நிகழ்வான அடிக்கல் நாட்டும் நிகழ்வானது 2020.03.03ம் திகதி காலை 11.30க்கு நடைபெற்றது. இந் நிகழ்வில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், திட்டமிடல் பணிப்பாளர் சர்வேந்திரன், கிராம அலுவலர், அபிவிருத்தி உத்தியோகத்தர், சமுர்த்தி உத்தியோகத்தர், சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.


























