எமது பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தர் நலன்புரிச்சங்கத்தினால் வருடாந்தம் நடாத்தப்படும் இரத்ததான நிகழ்வு இம்முறையும் 2020.05.04ம் திகதி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலர் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் எமது அலுவலக உத்தியோகத்தர்கள், எமது பிரிவிற்குட்பட்ட விளையாட்டுக்கழக உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர். இதில் பங்கு பற்றிய மற்றும் ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் உத்தியோகத்தர் நலன்புரிச்சங்கத்தின் சார்பில் எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.



























