தீவகம் தெற்கு சுற்றுச்சூழல் பேரவையால் மழைநீர் சேகரிப்பும் நீர் முகாமைத்துவமும் இறுவட்டு வெளியீடு 19.08.2020ம் திகதி வேலணை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
இது வேலணை பிரதேச செயலகத்தின் பொதுநலம் கருதிய வெளியீடு. நீரானது மனித அசைவியக்கத்திற்கு மட்டுமன்றி சூழலில் விலங்குகள் மற்றும் தாவரங்களின் அசைவியக்கத்திற்கும் பிரதானமானது. தீவக பிரதேசம் வடமாகாணத்தின் ஏனைய பிரதேசங்களுக்கான சராசரி மழை வீழ்ச்சி பெறுகின்ற போதும் கடும் வறட்சியை விரைவாக சந்திக்கின்றது. மழை நீரை தரைக்கீழ் நீராக மாற்றுவது மட்டுமே தீவகத்தில் வறட்சி தணிப்பிற்கு நீண்டகால தீர்வாகும். உலகின் பல நாடுகள் போன்று மழை நீர் முகாமையினை நாமும் மேற்கொண்டு பசுமைத்தீவினை உறுதி செய்வோம்.


























