மனைப் பொருளாதார போசணையை மேம்படுத்தி குடும்ப அலகுகளை வலுவூட்டுதற்கான தேசிய வீட்டுத்தோட்டப் பயிர்ச்செய்கை வேலைத்திட்டத்தின் கீழ் 2020/10/26ம் திகதி J/19 கிராம அலுவலர் பிரிவில் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து வேலணை வலய பிரிவில் உரிய சமுர்த்தி உத்தியோகத்தர்களால் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு கத்தரி, மிளகாய், தக்காளி மற்றும் கறிமிளகாய்ச் செடிகள் என்பன வழங்கப்பட்டு சிறு வீட்டுத்தோட்டம் ஆரம்பிக்க வழி வகுக்கப்பட்டது.


























