வேலணை பிரதேச செயலக உத்தியோகத்தர் நலன்புரிச்சங்கத்தின் ஏற்பாட்டில் தைப்பொங்கல் விழா 2022.01.18ம் திகதி பிரதேச செயலர் தலைமையில் எமது பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. மிகவும் சிறப்பாக நடைபெற்ற இந் நிகழ்வில் பொங்கல் நிகழ்வுகளை தொடர்ந்து உத்தியோகத்தர்களுக்கான கயிறு இழுத்தல் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் உத்தியோகத்தர்கள் உற்சாகத்துடனும் ஆர்வத்துடனும் பங்குபற்றி தமக்கான பரிசுகளைப் பெற்றுக்கொண்டனர்.





























