புதுக்குடியிருப்பு பிரதேச செயலகம் மற்றும் பிரதேச செயலாளருக்கு பொலீசாரால் ஏற்படுத்தப்பட்ட அபகீர்த்திக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக இன்று 08.08.2022 திங்கட்கிழமை காலை 10.00 மணிக்கு எமது வேலணப் பிரதேச செயலகத்தின் பிரதான நுழைவாயிலில் கண்டணப் பேரணி ஒன்று இடம்பெற்றது. இப் பேரணியில் எமது உதவிப் பிரதேச செயலாளர், உதவித் திட்டமிடல் பணிப்பாளர், நிர்வாக உத்தியோகத்தர்,நிர்வாக கிராம உத்தியோகத்தர்,சமுர்த்தி முகாமையாளர் உள்ளிட்ட பதவிநிலை உத்தியோகத்தர்களும் கிராம மட்ட உத்தியோகத்தர்கள், அலுவலகஉத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு தமது எதிர்ப்பை இங்கு வெளிப்படுத்தியுள்ளனர்.


























