75 வது சுதந்திர தின விழா - 2023
................................................................
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 75 வது சுதந்திர தின விழா இன்றைய தினம் எமது வேலணை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் காலை 08.21 மணிக்கு சுபநேரத்தில் பிரதேச செயலரினால் தேசியக் கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலரின் உரையை தொடர்ந்து வேலணை பிரதேசத்தில் மேலும் 75 ஆவது சுதந்திர தின விழாவினை முன்னிட்டு நடாத்தப்பட்ட சிறந்த கிராமியப் பொருளாதார புத்தெழுச்சி மற்றும் உணவுப் பாதுகாப்பு குழுத் தெரிவு, சிறந்த வீட்டுத் தோட்டத் தெரிவு, சிறந்த சிரமதான திட்டத்தை மதிப்பிடுதல், மரநடுகை போன்ற போட்டிகளில் வெற்றியீட்டியவர்களிற்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் மற்றும் அனுபவப் பகிர்வும் இடம்பெற்றது. இறுதியாக மரநடுகை நிகழ்வுடன் நிறைவுபெற்றது.

























