யாழ்ப்பாண மாவட்ட அரச அதிபர் வெற்றிக் கிண்ண விளையாட்டுப்போட்டி நிகழ்வு மாவட்ட செயலக பிரதித்திட்டமிடல் பணிப்பாளரும், நலன்புரி சங்க தலைவருமான திரு.இ.சுரேந்திரநாதன் தலைமையில் நேற்றைய தினம் (29.11.2023) பிற்பகல் 01மணிக்கு வேலணை துறையூர் ஐயனார் கழக விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. இந் நிகழ்வில், பிரதம விருந்தினராக மாவட்ட அரசாங்க அதிபரும், நலன்புரி சங்க போசகருமான திரு.அம்பலவாணர் சிவபாலசுந்தரன், சிறப்பு விருந்தினர்களாக மேலதிக அரசாங்க அதிபரும் உபபோசகருமான திரு.மருதலிங்கம் பிரதீபன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு.கனகராஜா ஸ்ரீமோகனன் மற்றும் கௌரவ விருந்தினராக வேலணை பிரதேச செயலாளர் திரு.கயிலாசபிள்ளை சிவகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தார்கள்.
யாழ்ப்பாண மாவட்ட செயலகம் உட்பட பதினைந்து பிரதேச செயலகங்களுக்கும் இடையில் நடைபெற்ற அரச அதிபர் வெற்றிக் கிண்ண விளையாட்டுப்போட்டியில் பருத்தித்துறை பிரதேச செயலகம் முதலாம் இடத்தினையும், தெல்லிப்பழை பிரதேச செயலகம் இரண்டாம் இடத்தினையும், கரவெட்டி பிரதேச செயலகம் மூன்றாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டுள்ளன.
அரச அதிபர் வெற்றி கிண்ணம் -2023 இறுதி நாளில் எமது உத்தியோகத்தர்கள், பங்குபற்றிய மற்றும் வெற்றி பெற்ற அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் நன்றிகளும் பாராட்டுகளும்....
இதில், மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள், பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், மாவட்ட மற்றும் பிரதேசசெயலக உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டிருந்தார்கள்







நிகழ்வின் புகைப்படங்களின் தொகுப்பினைக் காண கீழே உள்ள Link இனை Click செய்யவும்
https://drive.google.com/.../1Xa6vwAP2QAP5zR0XQyPr4...
























