76வது சுதந்திர தினம்...
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 76வது சுதந்திர தின நிகழ்வுகள் இன்று எமது அலுவலகத்தில் நடைபெற்றது. எமது பிரதேச செயலாளா் தேசியக் கொடி ஏற்றி வைத்து சுதந்திரதின சிறப்புரை ஆற்றினார். எமது நாட்டின் சுபீட்சத்தினை நோக்கிய பயணத்தில் 76வது சுதந்திர தின நல்வாழ்த்துக்களை எமது அலுவலகம் சாா்பாக உங்களுக்கு தெரிவித்து கொள்கின்றோம்.
76 ஆவது சுதந்திர தின விழாவினை முன்னிட்டு 01.02.2024 தொடக்கம் 07.02.2024 ஆம் திகதி வரை நடாத்தப்படும் மரநடுகை வாரம் மற்றும் சிரமதான நிகழ்வுகள் தொடர்பாக பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக இன்றைய தினம் எமது அலுவலக வளாகத்தில் எமது மதிப்பிற்குரிய பிரதேச செயலாளர் தலைமையில் மர நடுகை நிகழ்வானது நடைபெற்றது.
இன்றய இந்த நிகழ்வில் மருத்துவ குணமுள்ள மூலிகை மரங்கள் மற்றும் பழ மரக் கன்றுகள் என்பன நாட்டப்பட்டன. இன்றய இந்த நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர், கணக்காளர், நிர்வாக உத்தியோகத்தர், ஏனைய பதவி நிலை உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டு மரக் கன்றுகளை நாட்டி வைத்தனர்.































