தற்போது நிலவிவரும் சீரற்ற காலநிலை மற்றும் தொடரும் பருவகால மழைவீழ்ச்சி காரணமாக எமது பிரதேச செயலத்தின் பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் 603 குடும்பங்களைச் சேர்ந்த 1938 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 319 குடும்பங்களைச் சேர்ந்த 1109 நபர்கள் உறவினர் வீடுகளில் தங்கியுள்ளனர். 132 குடும்பங்களைச் சேர்ந்த 511 நபர்கள் 08 பாதுகாப்பான அமைவிடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 04 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கான சமைத்த உணவுகள், உலர் உணவுகள் கிராம சேவையாளர் ஊடாக வழங்கப்பட்டு வருகின்றது.




பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவிகளை செய்ய விரும்புபவர்கள் பிரதேச செயலகத்தின் இடர் முகாமைத்துவ குழுவிடம் தொடர்பு கொண்டு உதவிகளை மேற்கொள்ளவும்.
தொடர்புகளுக்கு -
0772890302 - உதவி பிரதேச செயலாளர் (ADS)
0776105130 - நிர்வாக உத்தியோகத்தர் (AO)
























