வேலணை பிரதேச செயலகமும் வேலணை பிரதேச செயலக மாற்றாற்றலுடையோர் சுய உதவிக்குழுவும் இணைந்து நடத்திய சர்வதேச மாற்றாற்றலுடையோர் தினம் திருமதி. பாமா மோகனமுரளி உதவி பிரதேச செயலர் அவர்களின் தலைமையில் பிரதேச செயலக பழைய மாநாட்டு மண்டபத்தில் (13.01.2026) நடைபெற்றது. திரு. த.அகிலன் பிரதேச செயலர், திரு. அ.ஜெயக்குமார் பொது சுகாதார வைத்திய அதிகாரி,திரு .ச. ஜீவிதன் கணக்காளர்,திரு.கி.மணிராஜ் தலைவர்(CBR), திருமதி.அ.அனுசா -சமூக சேவை உத்தியோகத்தர், திரு.சசிகாந் - Fairmed நிறுவன உத்தியோகத்தர், திருமதி.றெ. சுவர்னா டலிமா சமூக சேவை அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் மாற்றாற்றலுடையோர் ஆகியோர் கலந்து கொண்டனர்

























