சர்வதேச சிறுவர் முதியோர் தின விழா - 2019
2019ம் ஆண்டுக்கான வேலணை பிரதேச செயலகத்தின் சர்வதேச சிறுவர் முதியோர் தின விழா திரு. அம்பலவாணர் சோதிநாதன் (பிரதேச செயலர்,வேலணை) அவர்களின் தலைமையில் 2019.10.10ம் திகதி காலை 10.00 மணிக்கு வேலணை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக DR.N.முகுந்தன் (சுகாதார வைத்திய அதிகாரி, வேலணை) அவர்களும் சிறப்பு விருந்தினராக திரு. T.கனகராஜா (மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர், யாழ்ப்பாணம்) அவர்களும் கலந்து கொண்டனர். இந் நிகழ்வில் சிறுவர், முதியோர், மாற்றாற்றலுடையோரின் பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெற்றதுடன் இவர்களுக்காக நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்களும் வழங்கப்பட்டது.




























