இலங்கையின் 72 ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வு "பாதுகாப்பான தேசம் வளமான நாடு" என்னும் தொனிப்பொருளில் 2020.02.04ம் திகதி காலை 8.00 மணிக்கு வேலணை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. பிரதேச செயலாளர் அவர்களால் தேசியக்கொடி ஏற்றப்பட்டு ஆரம்பமான இந்நிகழ்வில் தேசியகீதம் இசைக்கப்பட்டதுடன் பிரதேச செயலாளரின் உரையும் சிறப்பாக இடம்பெற்றது. இந் நிகழ்வுகளைத் தொடர்ந்து பிரதேச செயலக வளாகம் மற்றும் எமது பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பல்வேறு இடங்களில் மரநடுகை, சிரமதானம் இடம்பெற்றது.


மேலும் புகைப்படங்களை பார்வையிட
























