உலக சுற்றுச்சூழல் தினம் புவிக்கோளையும் அதன் இயற்கையையும் காப்பாற்ற தேவைப்படும் சுற்றுச்சூழல் செயல்பாட்டைப் பற்றிய நேரடியான உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்த ஜூன் 05ம் திகதி கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் 2020ம் ஆண்டுக்கான சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு எமது பிரதேச செயலக வளாகத்திலும் கிராம அலுவலர் பிரிவுகளிலும் மரநடுகை நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.




























