இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 74வது சுதந்திர தின நிகழ்வு 2022.02.04ம் திகதி எமது அலுவலகத்தில் பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்றது.
காலை 8.19 மணிக்கு தேசியக் கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதத்துடனான மரியாதை செலுத்தும் நிகழ்வு இடம்பெற்றது. எமது நாட்டின் சுதந்திரத்திற்கு போராடி உயிர்த்தியாகம் செய்தவர்களுக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து சுதந்திர தின முக்கியத்துவம் தொடர்பாகவும் நாடு சுதந்திரமடைந்ததற்கு முன்னரான காலங்களும் சுதந்திரத்திற்கு பின்னர் நாடு எதிர் நோக்கிய சவால்களும் அதற்காக பாடுபட்டவர்களின் வரலாறும் எடுத்துக் கூறப்பட்டது.
சுதந்திர தினத்தினை முன்னிட்டு எமது அலுவலக சூழலில் மரநடுகை இடம்பெற்றதுடன் சிரமதான நிகழ்வும் நடைபெற்றது.
























