Clean Sri Lanka தேசிய நிகழ்ச்சி திட்டத்தில் வேலணை பிரதேச செயலாளர் திரு.க.சிவகரன் அவர்களின் தலைமையில் நேற்றைய தினம் (23.02.2025) “அழகான கடற்கரை ஓர் கவர்ச்சிகரமான சுற்றுலாத்தளம்” எனும் தொனிப்பொருளில் சாட்டி கடற்கரை பகுதி பிரதேச செயலகம் தீவகம் தெற்கு வேலணையின் ஒருங்கிணைப்பின் கீழ் சுத்தம் செய்யப்பட்டது. நிழ்வில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், வேலணை பிரதேச சபை செயலாளர், பிரதேச சபை உத்தியோகத்தர்கள், இலங்கை கடற்படையினர், பொது சுகாதார பரிசோதகர், பிரதேசத்தின் பொது அமைப்புக்களின் உறுப்பினர்கள், பொது மக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.




























