Clean Sri Lanka நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் 28.03.2025 அன்றுஅல்லைப்பிட்டி J/10 வெண்புரவி கடற்கரையை அண்டிய பிரதேசத்தினை சுத்தம் செய்தல் நிகழ்ச்சித்திட்டம் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதேச செயலாளர் திரு.க.சிவகரன், உதவி பிரதேச செயலாளர், நிர்வாக உத்தியோகத்தர், வேலணை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்,சுற்றுச்சூழல் கடலோர பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், வணக்கத்திற்குரிய அல்லைப்பிட்டி பங்குத்தந்தை அவர்கள், கிராம உத்தியோகத்தர்கள், சமுத்தி உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், இலங்கை கடற்படையினர், கிராம மக்கள், தப்ரபேனர் கடல் உணவுகள் பதப்படுத்தல் நிலைய முகாமையாளர் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.



























