இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தால் நல்லூர் கந்தசாமி ஆலய உற்சவ காலத்தை முன்னிட்டு கடந்த சனிக்கிழமை (16.08.2025) நடைபெற்ற தெய்வீக திருக்கூட்ட நிகழ்வில் வேலணை பிரதேச அறநெறிப் பாடசாலைகளின் கலை நிகழ்வுகள் நடைபெற்றது. நிகழ்வில் யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மதிப்பிற்குரிய திரு.கயிலாயபிள்ளை சிவகரன் அவர்கள் சிறப்பு அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

























