
ஜனாதிபதி அவர்கள் உரையாற்றுகையில் எதிர்வரும் மூன்று வருடங்களில் இங்கு சர்வதேச போட்டிகள் இடம்பெறும் எனவும் இந்த ஆண்டு இறுதிக்குள், யாழ்ப்பாணம் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் முதலாவது போட்டி நடைபெறும் எனவும், விளையாட்டில் ஒரு திருப்புமுனையைக் குறிக்கும் வகையில் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் எடுத்த இந்த நடவடிக்கைக்கு பாராட்டுக்களையும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் இலங்கை கிரிக்கெட் சபைத் தலைவர் ஷாமி சில்வா, விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே, கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், பாராளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், ஜெ.ரஜீவன், ச.ஶ்ரீபவானந்தராஜா வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் ம.பிரதீபன், மேலதிக அரசாங்க அதிபர் க.சிவகரன், பிரதேச செயலாளர் தீவகம் தெற்கு,வேலணை த.அகிலன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
























