User Rating: 0 / 5

Star InactiveStar InactiveStar InactiveStar InactiveStar Inactive
 

பிரதேச விவசாய குழுக் கூட்டம், பிரதேச செயலாளர் திரு. த. அகிலன் அவர்களின் தலைமையில் நேற்று ( 24.09.2025) நடைபெற்றது. இக்கூட்டத்தில், பெரும்போகம், கட்டாக்காலி கால்நடைகள், பாதீனியம், விவசாயக் கடன் மற்றும் விவசாயக் காப்பீடு போன்ற விவசாயம் சார்ந்த பல முக்கிய விடயங்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. அத்துடன், 2025 ஆம் ஆண்டிற்கான திட்டமிடப்பட்ட வேலைத்திட்டங்கள் குறித்தும் ஆராயப்பட்டன. இந்தக் கூட்டத்தில், கமநல சேவை நிலையம், பிரதேச சபை, இலங்கை வங்கி, கடற்றொழில் திணைக்களம், நீர்ப்பாசன திணைக்களம், காப்புறுதி சபை, கால்நடை வைத்திய பணிமனை ஆகிய திணைக்களங்களைச் சேர்ந்த உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர். மேலும், திட்டமிடல் பணிப்பாளர், கிராம மட்ட உத்தியோகத்தர்கள், பிரதேச செயலகத்திற்குட்பட்ட விவசாய சம்மேளன உறுப்பினர்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோரும் பங்கேற்றனர்.

1 2

1 2

News & Events

10
අගෝ2026
‘அத்தம’ தேசிய தூய்மை வேலைத்திட்டம்

‘அத்தம’ தேசிய தூய்மை வேலைத்திட்டம்

“அத்தம “ தேசிய வேலை திட்டத்தின் பிரதான நிகழ்வு...

18
පෙබ2026
ஆக்கத்திறன் கண்காட்சி 2026

ஆக்கத்திறன் கண்காட்சி 2026

வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களம் மற்றும் வேலணை...

09
පෙබ2026
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78 ஆவது சுதந்திர தின விழா

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78 ஆவது சுதந்திர தின விழா

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78 ஆவது சுதந்திர...

09
පෙබ2026
தேசிய மட்ட கபடி,வலைப்பந்தாட்டம்,கரப்பந்தாட்ட பயிற்சி முகாம்களுக்கான தெரிவுகள் - 2026

தேசிய மட்ட கபடி,வலைப்பந்தாட்டம்,கரப்பந்தாட்ட பயிற்சி முகாம்களுக்கான தெரிவுகள் - 2026

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் தேசிய மட்ட கபடி,வலைப்பந்தாட்டம்,கரப்பந்தாட்ட...

Scroll To Top