சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் சமுர்த்தி ஹரசர திட்டம் -2024 வங்கிகளை தரப்படுத்தும் திட்டத்தில் யாழ்.மாவட்டத்தில் 3 ஆம் இடத்தினை பெற்ற வேலணை சமுர்த்தி வங்கி உத்தியோகத்தர்களுக்கு பாராட்டுப் பத்திரம் வழங்கும் நிகழ்வு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.க.சிவகரன் அவர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

























