சரவணை மக்கள் ஒன்றியத்தினால் (கனடா) தையல் பயிற்சி நெறி வழங்கப்பட்டது. இவ் பயிற்சி நெறிக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்றையதினம் (05.11.2025) நடைபெற்றது. இன் நிகழ்வில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவன், முன்ன்ள் அரசாங்க அதிபர் திரு.அ. சிவபாலசுந்தரன், பிரதேச செயலாளர் திரு.த.அகிலன், பிரதேச சபை உறுப்பினர்,கிராம அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

























