இன்று (08.11.2025) கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் வேலணை பிரதேச செயலகத்தால் நடாத்தப்பட்ட பிரதேச மட்ட கலை இலக்கிய பரிசளிப்பு விழா உதவி பிரதேச செயலாளர் திரு.க.பார்த்தீபன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் பிரதேச செயலாளர் திரு.த.அகிலன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டதோடு மாணவர்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

























