இன்று ( 22.11.2025) கண்டல் தாவரங்களின் நடுகை காலை 7.00 மணி தொடக்கம் 11மணி வரை மண்டைதீவு பிரதான வீதியில் இருந்து வழிப் பிள்ளையார் கோயில் வரை 250 கண்டல் தாவர நடுகை இடம் பெற்றது. இந் நிகழ்ச்சித் திட்டத்தில் உதவி பிரதேச செயலாளர் திரு.க.பார்த்தீபன், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் யேசுதாஸ் (RDO), கரையோர பாதுகாப்பு உத்தியோகத்தர் துவாரகன், சுற்றுச்சூழல் உத்தியோகத்தர் தினேஸ்கௌரி (EO), கிராம உத்தியோகத்தர்கள் வாகீசன், கோகுலரூபன் மற்றும் கடற் தொழிலாளர்கள் ஆகியோர் மிகுந்த ஈடுபாட்டுடன் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது .

























