தொழில் தேடுவோருக்கான விழிப்பூட்டும் நிகழ்வு
எமது பிரதேச செயலகத்தின் மனிதவள அபிவிருத்தி பிரிவினால் ஒழுங்கமைக்கப்பட்ட தொழில் தேடுவோருக்கான விழிப்பூட்டும் நிகழ்வு 2019.10.15ம் திகதி காலை 9.30 மணிக்கு செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் தொழில் தேடுவோருக்கான உளவியல் சோதனை இடம்பெற்றதுடன் தொழில் வழிகாட்டல் ஆலோசகரால் ஆலோசனை வழங்கப்பட்டது. இவ் விழிப்புணர்வு நிகழ்வில் எமது செயலக பிரிவிற்குட்பட்ட 43 தொழில் தேடுவோர் கலந்து கொண்டனர்.

























