ஒளி விழா - 2019
எமது பிரதேச செயலகத்தின் 2019ம் ஆண்டுக்கான ஒளி விழா திரு. சி. ராஜீவ் (உதவி பிரதேச செயலர், பிரதேச செயலகம், வேலணை) அவர்கள் தலைமையில் 2019.12.23ம் திகதி காலை 10.00 மணிக்கு செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.இவ் விழாவின் பிரதம விருந்தினராக அருட்பணி ம.டேவிட் (மறைக்கோட்ட முதல்வர், தீவகம்) அவர்கள் கலந்து கொண்டார். மெழுகுவர்த்தி பவனியுடன் ஆரம்பமான இவ் விழாவில் ஒளியேற்றல், வருகைப்பாடல், மன்றாட்டு நிகழ்வுகளை தொடர்ந்து எமது செயலக பிரிவிலுள்ள தேவாலய பங்கு மாணவர்களதும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களினதும் பல்வேறு கலை நிகழ்வுகள் இடம்பெற்றது. கலை நிகழ்வுகளில் பங்கு பற்றிய சிறுவர்களுக்கும் ஏனைய சிறார்களுக்கும் அன்பளிப்புகள் வழங்கப்பட்டு இவ் விழா சிறப்பாக நடைபெற்றது.



























