சுனாமி அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்கான நினைவு தினம் - 2019
2004ம் ஆண்டு இடம்பெற்ற சுனாமி அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்கான 15ம் ஆண்டுக்கான நினைவு கூரும் நிகழ்வு பிரதேச செயலர் தலைமையில் எமது பிரதேச செயலகத்தில் 2019.12.26ம் திகதி காலை 9.30 மணிக்கு அனுஸ்டிக்கப்பட்டது. கொடியேற்றத்துடன் ஆரம்பமான இந் நிகழ்வில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்கான மௌன அஞ்சலியை செலுத்தினர். தொடர்ந்து பிரதேச செயலரால் நினைவு தின உரை நிகழ்த்தப்பட்டதுடன் அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தரால் அனர்த்த பாதுகாப்பு தொடர்பாகவும் உரை நிகழ்த்தப்பட்டது.
























