வருடாந்த ஒன்று கூடலும் பிரிவுபசார நிகழ்வும் - 2019
2019ம் ஆண்டுக்கான வருடாந்த ஒன்று கூடலும் பிரிவுபசார நிகழ்வும் காலை 9.00 மணிக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் எமது பிரதேச செயலகத்தில் கடமையாற்றி 2019ம் ஆண்டு இடமாற்றம் பெற்றுச் சென்ற உத்தியோகத்தர்களுக்கும் ஓய்வு பெற்றுச் சென்ற உத்தியோகத்தர்களுக்குமான கௌரவிப்பு இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து அவர்களின் அனுபவ பகிர்வும் ஏற்புரையும் நிகழ்த்தப்பட்டதுடன் பல்வேறு கலை நிகழ்வுகளும் மதிய போசனமும் இடம்பெற்றது.

























