பன்னிரு மாத விளக்கு வேலைத்திட்டத்தின் இவ் ஆண்டின் முதலாவது நிகழ்வாக வேலணை பிரதேச செயலகமும் தீவகம் தெற்கு கலாசார அதிகார சபையும் இணைந்து நடாத்திய 2020ம் ஆண்டிற்கான பொங்கல் விழா 2020.02.08ம் திகதி காலை 7.30 மணிக்கு சரவணை செல்லக்கதிர்காமம் முருகன் ஆலயத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக மாவட்ட கலாசார அதிகார சபை இணைப்பாளர் திரு. இ. கிருஷ்ணகுமார் அவர்களும் சிறப்பு விருந்தினராக திருமதி இ.புவனேஸ்வரி அவர்களும் கௌரவ விருந்தினராக திரு. மருதன் கந்தையா அவர்களும் கலந்து கொண்டனர். கலாசார முறைப்படி விருந்தினர்கள் வரவேற்கப்பட்டு பொங்கல் நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் மரநடுகையும் இடம்பெற்றது. அதனை தொடர்ந்து அறநெறி பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று விழா இனிதே நிறைவடைந்தது.

























