அரசாங்கத்தின் தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் ஊடாக கொள்வனவு செய்யப்பட்ட நெல்லின் மூலம் எமது பிரதேசத்தில் வசிக்கும் 4081 குடும்பங்களுக்கு தலா 10 கிலோ கிராம் வீதம் அரிசிப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. எமது அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இவ் நிகழ்வு இன்று மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இவ் நிகழ்வில் கௌரவ கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும், கௌரவ இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல் அவர்களும், ஜனாதிபதியின் விசேட ஆலோசகர் திரு சாகல ரட்நாயக்கா அவர்களும் இலங்கை இரானுவத் தளபதி அவர்களும், யாழ் மாவட்ட இரானுவத் தளபதி அவர்களும் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

























