வீதிப்பாதுகாப்பு வாரம் - 2019
வட மாகாணத்திலுள்ள போக்குவரத்தில் ஏற்பட்டுள்ள இடர்களை நிவர்த்தி செய்யும் நோக்கிலும் வீதி விபத்துக்களை குறைப்பதற்காகவும் கௌரவ ஆளுநரின் வழிகாட்டலில் வட மாகாண வீதி பாதுகாப்பு சபையும் ஆளுநர் செயலகமும் இணைந்து எதிர்வரும் 2019.10.07ம் திகதி தொடக்கம் 2019.10.13ம் திகதி வரையிலான ஒரு வார காலம் வீதிப்பாதுகாப்பு வாரமாக பிரகடனப்படுத்தயுள்ளது. அந்த வகையில் 2019.10.07ம் திகதி காலை 9.30 மணிக்கு செயலக மாநாட்டு மண்டபத்தில் உதவி பிரதேச செயலர் தலைமையில் இடம்பெற்ற விழிப்புணர்வு நிகழ்வில் அனைத்து உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டு வீதிப்பாதுகாப்பு தொடர்பான உறுதிமொழி எடுத்துக்கொண்டதுடன் வீதிப்பாதுகாப்பு தொடர்பான விடயங்கள் எமது செயலக உத்தியோகத்தரால் எடுத்துரைக்கப்பட்டது.

























