பொதுமக்களுக்கான அறிவித்தல்!
உயர் அழுத்த மின்மார்க்கத்திற்கான திருத்த வேலை தொடர்பானது - வேலணை புங்குடுதீவு பாலம்
புங்குடுதீவு வாழ்மக்களின் மின்சார விநியோகிப்பின் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதற்காக வேலணை புங்குடுதீவு பாலத்தினூடாக புங்குடுதீவு பிரதேசத்திற்கு கடல்மார்க்கமாக கொண்டு செல்லப்படும் உயர் அழுத்த மின்மார்க்க வடங்கள் மற்றும் மின்கம்பங்களினை பராமரிக்கும் வேலைகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது.
இப்பணிகள் கடல் நீர் வற்றும் காலங்களிலேயே மேற்கொள்ள முடியும் என்பதனால் 06.06.2022 தொடக்கம் 31.07.2022 வரையான காலப்பகுதியில் கட்டம் கட்டமாக மேற்கொள்ள தீர்மானித்துள்ளோம்.( நயினாதீவு திருவிழாக் காலங்களில் இவ்வேலைகள் இடம்பெறமாட்டாது.)எனவே இக்காலப்பகுதியில் இப்பாதையினூடு பயணிப்போருக்கு சில தடங்கல்கள் / தாமதங்கள் ஏற்பட வாய்ப்பிருப்பதால் இவ்விடயத்தை முன்கூட்டியே தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டுவரவிழைகின்றோம்.

























