உலர் உணவு வழங்கல் திட்ட நிகழ்வு- 2023
2023.01.25 புதன்கிழமை பி.ப 12.30 மணிக்கு வேலணை பிரதேச செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் உலக உணவு திட்ட அனுசரணையுடன் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான உலர் உணவு வழங்கல் திட்ட நிகழ்வு இடம்பெற்றது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக
திரு.அ.சிவபாலசுந்தரம் (அரசாங்க அதிபர் - யாழ்ப்பாணம்) அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக உலக உணவு திட்ட பிரதிநிதிகள்
Mr. Josphat Mushongah (Emergency coordinator),
Mr. Musthafa Nihmath (Government Partnership Officer), Mr.varunanathan Kajananan (Programme Associate), Mr.Nadeshapillai Thevanayagam (Field Assistant), ஆகியோரும்
திரு.யூட்.நிசாந்தன் (திட்ட முகாமையாளர் - World Vision) அவர்களும்,
திரு.கி.சந்திரசேகரம் (கூட்டுறவு உதவி ஆணையாளர் - யாழ்ப்பாணம்) அவர்களும், திருமதி.ஆ.தவமலர் (பொதுமுகாமையாளர் ப.நோ.கூ.ச வேலணை )அவர்களும் வேலணை பிரதேச செயலகத்தின் பிரதேச செயலர், உதவி திட்டமிடல் பணிப்பாளர், உதவி பிரதேச செயலர் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்து சிறப்பித்தனர்.




















































