டெங்கு கட்டுப்படுத்தல்
எமது பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிரதேசங்களில் டெங்கு நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எமது பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் வேலணை சுகாதார பணிமனை உத்தியோகத்தர்கள் இணைந்து எமது செயலக அனைத்து கிராம அலுவலர் பிரிவுகளிலும் உள்ள வீடுகள் மற்றும் கைவிடப்பட்ட பற்றைக்காணிகளுக்கும் தரிசிப்பினை மேற்கொண்டு டெங்கு தொடர்பாக பார்வையிட்டு அதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர் . அந்த வகையில் உரிய இடங்களுக்கு துண்டுப்பிரசுரங்கள் ஒட்டப்பட்டும் டெங்கு நோய் பரவுவதற்கு ஏதுவாக உள்ள இடங்கள் உடனடியாக துப்பரவு செய்யுமாறும் பணிக்கப்படுகின்றது. மேலும் டெங்கு தொடர்பான விழிப்புணர்வும் அறிவுறுத்தல்களும் பிரதேச வாழ் மக்களுக்கு தொடர்ந்தும் எடுத்துரைக்கப்பட்டு வருகின்றது.
























