B3S மென்பொருள் தொடர்பான பயிற்சி நெறி
எமது பிரதேச செயலகத்தில் B3S மென்பொருளினை கையாளும் உத்தியோகத்தர்களுக்கான பயிற்சி நெறி 2019.12.02ம் திகதி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் அ. சோதிநாதன் (பிரதேச செயலர், பிரதேச செயலகம், வேலணை) அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இப் பயிற்சி நெறியில் கிராம அலுவலர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், வெளிக்கள, அலுவலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர். பயிற்சி நெறியின் வளவாளராக யாழ் மாவட்ட செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் ஸ்ரீ .சிவதர்சினி அவர்கள் கலந்து கொண்டார்.
























